ஒரு வயது கூட நிரம்பாத என் பேத்தி ஆராதனா என்னைப் பார்த்துத் தன் பொக்கை வாய் திறந்து சிரித்தப்படி 'தா....தா....!' - என்றாள். அவள் தாத்தா என்று அழைப்பது எனக்கு அவள் என்னிடம் எதையோ கேட்பது போல் இருந்தது.
தொண்ணூறு வயதைத் தாண்டிய எனக்கும் பல் இல்லை...
அவளுக்கும் பல் இல்லை.
தாத்தாவும்
பேத்தியும் பொக்கைவாயர்!
'என்னம்மா! என்ன வேணும்?'
குழந்தையை கொஞ்சினேன். தொடர்ந்து அது மீண்டும்
தன் கையை உயர்த்தி 'தா... தா...!' என்றது.
என் மகள் முதன் முதலில் என்னை 'அப்பா!' என்று
அழைத்த போது நான் அடைந்த மகிழ்ச்சியை விட என் பேத்தி என்னை 'தா(த்)தா' - என்றழைக்கும்
போது பன்மடங்கு மகிழ்ச்சியை அடைகிறேன்.
ஓ! அதனால் தான் பெயரன் - பேரன் - பெயர்த்தி -
பேத்தி என்ற தமிழ் வழக்கு உருவாயிற்றோ?
அருமையான விளக்கம்
ReplyDeleteசுருக்கமாக எனினும் நிறைவாகச்
சொல்லிப் போனவிதம் மனம் கவர்ந்தது
பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்