இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!


இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!

Tuesday 24 June 2014

நிறைவு

         பிரபல எழுத்தாளர் சாகரனுடைய நாவல் ஒன்றிற்கு சாகித்திய அகாடமி விருது கிடைத்ததை கொண்டாடும் முகத்தான் ஒரு விழா எடுக்க விழைந்தனர் அவரது ரசிகர்கள் சிலர். இதை சாகரனிடம் கூறிய போது முதலில் அவர் மறுத்தாலும் அன்பர்களின் வற்புறுத்தலால் ஒப்புதல் அளித்தார்.

         அடுத்த கட்டமாக அந்த விழாவிற்கு முன்னிலை வகுக்க பிரபல நடிகர் சூர்யாவை அழைக்க வேண்டும் என்ற வேண்டுகோள் விடப்பட்டதும் சாகரனால் அதை ஏற்க முடியவில்லை என்றாலும் அவரது மறுப்பு ரசிகர்களின் அன்பின் முன் நிலைத்து நிற்க முடியாமல் வளைந்து கொடுக்க வேண்டியதாயிற்று.

விழா நாள் குறிக்கப்பட்டது. சூர்யாவிடமும் தேதி பெறப்பட்டது.

எழுத்தாளர் சாகரனைப் பாராட்டிப் பலரும் பேசினர். விழாக்குழுவினர் எழுத்தாளர் பேசிய பின் கடைசியாக சூர்யா பேசுவதாக நிகழ்ச்சு நிரலை அமைத்திருந்தனர். இந்த இடத்தில் தான்  சாகரன் வேறுபட்டார். நான் நிகழ்ச்சியின் கதாநாயகன்.  எனவே என் உரை தான் இறுதி உரையாக இருக்க வேண்டும் என்று கூறிவிட்டார்.

எழுத்தாளரின் முடிவை மாற்ற முடியாத விழாக்குழுவினர் சூர்யாவை பேச அழைத்தனர்.  சூர்யா எழுத்தாளரின் ஆத்ம ரசிகர். அவரது நூல்களில் பலவற்றைப் படித்தவர்.  எனவே எழுத்தாளரின் நூல்களின் எழுத்தின் சிறப்பை விவரித்து ஒரு மணி நேரத்திற்கு மேல் சிறப்பாக உரையாற்றி அமர்ந்தார். இறுதியாக எழுத்தாளர் சகாரன் உரையாற்ற வேண்டும். அவரும் ஒலி வாங்கி முன் வந்து நின்றார்.

சூர்யா பேசி முடிக்கும் வரை அலை நிறைந்து ஆயிக்கணக்கில்  குவிந்திருந்த கூட்டம் அவர் பேசி முடித்ததும் கலையத் தொடங்கி மிகச் சிலரே இருபத்திரண்டு பேரே அமர்ந்திருந்தனர். எழுத்தாளர் சாகரன் பெருமிதத்துடன் உரையாற்றத் தொடங்கினார்.

''இது வரை கூட்டம் அவை நிறைந்திருந்தது. அது நண்பர் சூர்யாவிற்காக வந்த கூட்டம். அவரது உரை முடிந்த பின் வடிக்கட்டப்பட்டு இலக்கிய அன்பர்கள் - எனக்காக மட்டும் வந்த நீங்கள் இருக்கிறீர்கள். நானும் ஆயிரக்கணக்கானோர் முன் பேசுவதை விட என் இலக்கிய வாசகர்களாகிய  உங்கள் முன் பேசுவதையே  விரும்புகிறேன். ஆம் அப்போது அவை நிறைந்த கூட்டம். இப்போது என் மனம் நிறைந்த கூட்டம்"" எனக் கூறித் தன் மேலான இலக்கிய உரையை பெருமிதத்துடன் ஆற்றத்தொடங்கினார்''

1 comment:

  1. தன் மீதும் தன் எழுத்தின் மீதும்
    தன்னம்பிக்கையுள்ள தன்மான எழுத்தாளர்
    நிச்சயம் இப்படித்தான் இருப்பார்
    அருமையான கதை
    பகிர்வுக்கும் தொடரவும் நல்வாழ்த்துக்கள்

    ReplyDelete