இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!


இவ்விதழில் இடம் பெற்றுள்ள கதைகளில் வரும் பெயர்களும் சம்பவங்களும் முற்றிலும் கற்பனையே!!

Saturday 28 June 2014

முளையில் முளைத்த பிழை

                நடந்தது இது தான்.

                சண்முகத்திற்க்கும், சுந்தரிக்கும் திருமணமாகி ஐந்தாண்டு காலத்திற்க்குள் மூன்று ஆண் குழந்தைகளைப் பெற்றெடுத்து விட்டாள். ஆனாலும் அவர்கள் உள்ளத்தில் திருப்தி இல்லை. ஏக்கமே மேலேங்கி நின்றது. அது --

                தங்களுக்கு ஒரு பெண் குழந்தை பிறக்க வேண்டும். அதற்க்கு விதவிதமான ஆடை அணிகலன்களைப் பூட்டி பார்க்க வேண்டும். அவள் வளர்ந்து பெரியவள் ஆனதும் அழகான மாப்பிள்ளைத் தேடிப் பிடித்து  அவளுக்குத் திருமணம் செய்து வைக்க வேண்டும். வீட்டு விசேஷங்களுக்கெல்லாம் மாப்பிள்ளையை முன் நிறுத்தி பெருமிதமாய் காரியங்களைச் செய்ய வேண்டும்.

                இப்படி எல்லாம் அவர்கள் இருவரும் கனவு கண்டு, கனவு கண்டு பெண் குழந்தைக்காக  ஏங்கினார்கள்.
                ஏன்?
             
                இப்போதும் சுந்தரி நிறைமாதம். பிறக்கப் போவது பெண்ணாக இருக்க வேண்டும் என்று மதுரை மீனாட்சி , காஞ்சி காமாட்சி, காசி விசாலாட்சி உள்ளிட்ட சகல பெண் தெய்வங்களையும் வேண்டி வேண்டி பிரார்த்தித்தார்கள்.

                வயிற்றில் வளர்வது ஆணா? பெண்ணா? என்று அறியத் துடித்தார்கள். ஆனால் ஸ்கேன் எடுத்துப் பார்ப்பது சட்டவிரோதம் என்று மருத்துவர் கண்டிப்பாகக் கூறித் தடுத்துவிட்டார்.  கர்பிணி தரையில் உட்கார்ந்திருந்து எழுந்திருக்கும் போது இடது கையை ஊன்றிய படி எழுந்தால் வயிற்றில் இருப்பது பெண்குழந்தை  என்று ஒரு சாரரும் இல்லை... இல்லை வலது கை ஊன்றி எழுந்தால் தான் பெண் குழந்தை வயிற்றில் வளர்வதாக ஐதிகம் என்று மறு சாரரும் கூற குழம்பிப் போனார் திருவாளர் சண்முகம்.

                இருந்தாலும் ஒரு மனத் திருப்திக்காக மனைவி தரையில் அமர்ந்திருந்து எழுந்திருக்கும் போதெல்லாம் அவளறியாமல் கண்காணித்தார்.

                விளைவு....

                காலையில் தரையில் அமர்ந்து இட்லி சாப்பிட்டு எழுந்திருக்கும் போது இடது கையை ஊன்றிய படி எழுந்தாள். இடது கை சொன்னவர்கள் தான் சரியாகச் சொல்லியிருப்பார்கள். எனவே பெண் குழந்தையாத் தான் இருக்கும் என்று சண்முகத்தின் மணம் கொஞ்சம் குதூகலித்தது.

                மாலையில் தரையில் அமர்ந்த காப்பி சாப்பிட்டுக் கொண்டிருந்த சுந்தரி காபி குடித்து முடித்ததும்,  'என்னங்க! என்று கணவனை அழைத்து காப்பி டம்ளரை அவரிடம் நீட்டி விட்டு எழுந்தாள்.
                காபி டம்ளரை வாங்கிய படி உன்னிப்பாக - வெகு வெகு கவனமாக கண்காணித்தார் சண்முகம்.

                தரையில் இருந்து எழுந்திருக்கும் போது சுந்தரி வலது கையை தரையில் ஊன்றிய படி எழுந்ததும்  
                அடியோடு குழம்பிப் போய் விட்டார் சண்முகம்.
             
                காலையில் இடது கையை ஊன்றி எழுந்தவள் இப்போது வலது கையை  ஊன்றி எழுகிறாளே. அப்படியானால்-----
                பிறக்கப் போவது ஆண் குழந்தையா? பெண் குழந்தையா?

                சண்முகத்திற்கு ஒரே குழப்பம். காலம் தான் அவரது குழப்பத்தைத் தீர்த்து வைக்க வேண்டும்.

                தீர்த்து வைத்தது,
 
                இடுப்பு வலி எடுத்ததுமே சுந்தரியை ஆட்டோவில் ஏற்றி மருத்துவமனைக்கு அழைத்துச்  சென்று அட்மிட் ஆகி சினமாக்களில்  வரும் அப்பாக்கள் போல சண்முகமும் மருத்துவமனை வராண்டாவில் - கையைப் பிசைந்துக் கொண்டிருந்தார். பக்கத்தில் அருண், வருண், மருண் என்ற அவருடைய அருமந்த புத்திரர்களை அங்கிருந்த நாற்காலியில் அமர்ந்த படி அப்பாவையேப் பார்த்துக் கொண்டிருந்தனர்.

                தங்களுக்கு எத்தனையோ தடவை வயிற்று வலி வந்த போது அப்பவோ, அம்மாவோ இப்படி துடித்ததில்லை. ஒரு டம்ளர் கஷாயம் கொடத்து சரி செய்து விடுவார்களே. இப்போ அம்மாவுக்கு வலி வந்ததும் மட்டும் அப்பா ஏன் இப்படித் துடிக்கிறார். அதுவும் ஆஸ்பத்திரி வரைக்கும் வந்து....

                                பாவம் குழந்தைகளுக்கும் புரியவில்லை.

                                தீடீர் என்று மருத்துவமனையின் நிசப்தத்தை  கிழித்துக் கொண்டு குழந்தை குவா குவாவும் சப்தம் கேட்டதும் சண்முகத்தின் பரப்பரப்பு அதிகரித்தது. மார்புத் துடிப்பு தாறுமாறாக  அலைபாய்ந்தது.

                 'அப்பாடா!!!

                நர்ஸ் ஒருவர் வெளியில் வந்தார். ஆவலுடன் அவரை நோக்கி ஓடினார் சண்முகம்.
                 'ஆண் குழந்தை! '
                மகிழ்ச்சியுடன் சென்னார் நர்ஸ்.

                வாடி வதங்கி சோர்ந்து போனார் சண்முகம்.

                                                                ***************

                                சண்முகமும் சுந்தரியும் முடிவே செய்து விட்டார்கள். தங்கள் தலை எழுத்தே இவ்வளவு தான் என்று. என்றாலும்

                ஒரு பழமொழி சொல்வார்களே  'விதியை மதியால் வெல்லலாம்' என்று. அப்படி வென்றெடுப்பது என்று தம்பதியர் முடிவு செய்தார்கள். உறுதி பூண்டார்கள்.

                தாங்கள் கையெடுத்துக் கும்பிட்டுப் பிரார்த்தனை செய்த பெண் தெய்வங்கள் எல்லாம்  தங்களைக் கைவிட்டாலும் தங்களின் மேலான - மேன்மையான மதி கைவிடாது என நம்பினார்கள். அதன் விளைவு.

                பிறந்த குழந்தை ஆணாக இருந்தால்  அதைப் பெண் குழந்தையாகப் பாவித்து கவுன் போட்டு, காலில் வெள்ளி கொலுசு பூட்டி பெண் குழந்தையைப் போல் பாராட்டி சீராட்டி வளர்த்தார்கள். குழந்தையைக் கொஞ்சும் போது கூட  'அடி என் ராசாத்தி' என்றே கொஞ்சிக் குழாவினார்கள்.

                குழந்தை வளர வளர அது ஆண் குழந்தை என்பதையும் மறந்தவர்களாய் கவுனும் பாவடையும் சுடிதாருமாய் அணிவித்து அழகுப் பார்த்தார்கள். குழந்தைக்கு பெயர் சூட்டும் போது கூட ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுவான பெயராக தேடி பிடித்து   'தங்கமணி' என்று பெயர்  வைத்தார்கள். ஆனாலும் ஓர் ஆண் மகனுக்கு எத்தனைக் காலம் தான் பெண் வேஷம் போட முடியும்.

                 பள்ளியில் சேர்க்கும் பருவம் வந்ததும் வேறு வழியின்றி வேதனை நிறைந்த நெஞ்சுடன் சட்டையும் அரைக் கால் டிராயரும் வாங்கி மாட்டி பள்ளிக்கு அனுப்பி வைத்தார்கள். என்றாலும்.

அந்த ஆறு வயது காலம் எட்டும் வரை பெண்  வேஷத்தில் எடுத்த விதவிதமான புகைப் படங்களை ஆல்பமாக்கி அலமாரியிலும், லாமினேஷன்  செய்து சுவரில் மாட்டியும் வைத்து அழகு பார்த்துத் திருப்திபட்டுக் கொண்டார்கள்.

                இந்நிலையில் தான்....

                தங்கமணி வளர்ந்து பள்ளி இறுதி வகுப்பையும் எட்டிப் பிடித்து  நல்ல மதிப்பெண்களையும் பெற்று வந்தான். இந்நிலையில் ஒரு ஞாயிற்றுக் கிழமை---  மதிய நேரம்----


                சாப்பிட்ட பாத்திரங்களை எல்லாம் துலக்கி வைத்துவிட்டு சுந்தரி சமையல் உள்ளில்  இருந்து வெளிப்பட்டவர் தன் அறைக்குச் செல்லும் முன் தற்செயலாகத் தன் மகனின் அறைப்பக்கம் பார்த்தவள் திடுக்கிட்டாள்.--------

                அங்கே அவளைத் திடுக்கிட வைத்தது தங்கமணியின் தோற்றம்.  ஆம்--

                தங்கமணி தன் தாயின் ரவிக்கையை மாட்டிக் கொண்டு - தாயின் சேலையைக் கட்டிக் கொண்டு  நிலைக் கண்ணாடி முன் நின்று தன்னை அழகு பார்த்துக் கொண்டிருந்தான். அதுவும் எப்படி?

                அப்படியும்  - இப்படியுமாக நளினமாகத் திரும்பி அழகி போட்டியில் வருவோர் போஸ் கொடுப்பார்களே அப்படி!! இதைப் பார்த்ததும் சுந்தரியின் அடிவயிற்றில் அக்கினிக்குஞ்சு சுழன்றது.


                தன் வருகையை மகன் உணரும் முன் விறுவென்த் தன் அறைக்குள் நுழைந்தாள். கட்டிலில்  சண்முகம் குறட்டை விடாத குறையாக  அயர்ந்த நித்திரையில் இருந்தார்.

                கட்டிலில் அமர்ந்த சுந்தரியின் மனம் அனலிடைச்  சிக்கிய புழுவெனத் துடித்தது.

                சின்னஞ்சிறு ஆண்குழந்தைகளுக்கு பெண் வேடமிட்டுப் பார்ப்பது ஒரு தனி அழகு தான், ரசனை தான்!. ஆனால் அதே ஆண்மகன் பதினாறு வயதைத் தாண்டிய பின்னும் யாரும் அறியாமல் மறைமுகமாக சேலைக் கட்டி பெண் வேடமிட்டு தன்னைத் தானே கண்ணாடியில் பார்த்து ரசித்தால் அதில் ரசனையா இருக்கும். – அழகா வழியும்; அபத்தம் அல்லவா தலை தூக்கி நிற்க்கும்.

                சுந்தரியின் மணம் அழுதது. தன் மகனின் இந்த நிலைக்கு காரணம் யார்?

                குற்ற உணர்ச்சி தலை தூக்க விழிகள் சூடுநீரைக் கக்கத் தொடங்கின.
             
                பெண் குழந்தை வேண்டும் என்ற ஆசையில் – பிறந்த ஆண் குழந்தையை இயற்கைக்கு விரோதமாக கிட்டத்தட்ட ஆறு ஆண்டு காலம் வரை பெண் வேடமிட்டு பெண்ணாக பாவித்து பெண்ணைக் கொஞ்சிக் குழவுவது போல் குலவி – ‘தங்கம்மா வாடி கண்ணு!’ என்று கொஞ்சிக் குழவியதன் விளைவு இன்று ஒரு பயங்கரத்தைத் தோற்றுவித்த்தோ---?

                நடுங்கியது சுந்தரியின் உள்ளம்.

                மனதிற்க்குள் இந்த பயங்கரத்தை பூட்டி வைத்துக் குமுறிக் கொண்டிருக்க அவளால் முடியவில்லை. தூங்கிக் கொண்டிருந்த கணவனை மெல்ல தட்டி எழுப்பினாள்.
             
                ‘என்னங்க!...’

                கண் விழித்த சண்முகம் கண்ணீருடண் காட்சி அளித்த சுந்தரியைப் பார்த்தது பதறி விட்டான்.

                கணவனிடம் தான் கண்ட காட்சியை விவரித்தாள்.

                திடுக்கிட்ட சண்முகம் எழுந்து தன் மகனின் அறைப்பக்கம் சென்று எட்டிப் பார்த்தான். அங்கே ---

                முழுக்க முழுக்க பெண் வேடம் தரித்து அன்ன நடை நடந்து ஒயிலாக அறையைச் சுற்றி வரும் மகனைப் பார்த்ததும் திகைத்து விட்டார்.

                தங்களின் இயற்க்கைக்கு மாறான பெண் குழந்தை ஆசையால் தன் மகனின் வாழ்க்கை பாழாகிக் கொண்டிருக்கிறதோ என்ற அச்சம் அவரது நெஞ்சில் கவ்வியது.

                தன் மகனைப் பெண்ணாகபு பாவித்து வளர்த்ததன் காரணமாக அவன் மணமும் அதுவாகவே மாறி கடைசியில் தன் மகன் திருநங்கையாகி விடுவானோ என்று எண்ணும் போது-

                சண்முகத்தின் நெஞ்சுக் குலை நடுங்கியது.

                மனைவியுடன் தன் அறைக்குள் நுழைந்தான். இருவரும் ரகசியமாக மந்திரலோசனை செய்தனர். கடைசியில் தகுந்த மனோதத்துவ மருத்துவரிடம் அழைத்துச் சென்று தக்க சிகிச்சை அளித்து தாங்கள் செய்த பிழையை முளையிலேயே கிள்ளி எறிந்து விட வேண்டும் என முடிவு செய்தனர்.

                முடிவு செயல்படுத்தப்பட்டது.

                ஒரு பிரபல மனோத்தத்துவ மருத்துவரிடம் இருவரும் சென்று ஆதியோடந்தமாக நடந்த அனைத்தையும் தெரிவித்து பரிகாரம் கேட்டனர். மருத்துவர், அவனது குறையைத் தெரிந்து கொண்டதாகக் காட்டிக் கொள்ளாமல் ஒரு மருத்துவ நண்பரைப் பார்க்கப் போகிறோம் என்று கூறி இங்கு அழைத்து வாருங்கள். மற்றவற்றை நான் பார்த்துக் கொள்கிறேன் என்றார். அவ்வாறே ஒரு குறிப்பிட்ட நாளில் – குறிப்பிட்ட நேரத்தில் தங்கமணியை அழைத்துக் கொண்டு மருத்துவமனைக்கு வந்தனர். நண்பரிடம் மகனை அறிமுகப் படுத்துவது போல் தங்கமணியை மருத்துவருக்கு அறிமுகப்படுத்தினர்.

                மருத்துவரும் புன்முறுவல் மாறா முகத்திடன் தங்கமணியின் படிப்பைப் பற்றி விசாரித்துக் கொண்டே சண்முகத்திடம் ,‘நீங்கள் கொஞ்சம் வெளியே போய் இருங்கள். நான் தங்கமணியிடம் கொஞ்சம் பேச விரும்புகிறேன்.’ – என்று இயல்பாகக் கூறி அவர்களை அனுப்பி விட்டு – தனது மருத்துவ முறைப்படி கேள்விக் கணைகளை தங்கமணி மீது தொடுக்க ஆரம்பித்தார். இப்படியே….

                ஒரு மணி நேரம் கழிந்தது. மருத்துவர் சண்முகத்தையும் சுந்தரியையும் அழைத்தார். படபடப்புடனும் பதட்டத்துடனும் வந்த அவர்களை உட்காரச் சொல்லி விட்டு தங்கமணியை மட்டும் கொஞ்சம் வெளியே போய் காத்திருக்குமாறு கூறி அனுப்பினார்.

                தங்கமணி அறையை விட்டு வெளியேறியதும் படபடப்புடன் சண்முகம் கேட்டார்.

                ‘டாக்டர்… என் மகன் எந்த நிலைமையில் இருக்கிறான்??

                மருத்துவர் புன்னகை சிந்தியப்படியே கூறினார்

                ‘கவலையே படாதீங்க. ஒரு குறையும் இல்லை. அவன் நல்லாவே – ரொம்ப ரொம்ப நல்லாவே இருக்கிறான்.!!

                சுந்தரி கேட்டாள், ‘ அதில்லை டாக்டர். கொஞ்ச நாளாவே அவனது நடை உடை பாவனை எல்லாம் பெண்ணாகவே…’ – எனும் போது குறுக்கிட்ட மருத்துவர் கூறினார்.

                ‘அவனது நடை, உடை, பாவனைகள் பெண்ணாக மாறலே. - மாறாக அவன் பெண்ணாக மாத்திக்க முயற்சிக்கிறான் – நடிக்கிறான். புரியலே, அவங்க பள்ளிக் கூட நடகத்தில் அவன் நடிக்கிறான் – கதாநாயகியாக. தன் நடிப்பு தத்ரூபமாக அமைய அவன் அடிக்கடி தனிமையில் ஒத்திகை பாத்துக் கொள்கிறான்.  அதைப் பார்த்துதான் நீங்க வீணா கற்பனை செய்து பயந்து என்னிடம் ஓடி வந்திருக்கிறிர்கள். மற்றபடி உங்கள் மகன் ஆல்ரைட்’.
                ‘அப்பாடா’ என்று தம்பதியர் பெருமூச்சு விட்டு நிம்மதி அடைந்தனர்.

                பள்ளி ஆண்டு விழா நாடகத்தில் மகனின் நடிப்பைக் கண்டு களித்த பெற்றோர் – மகள் இல்லா குறைத் தீர்க்க வந்த மகனின் பெண்வேடத்தைப் பல கோணங்களில் புகைப்படம் எடுத்து வைத்து மகிழ்ந்தனர்.


                கடவுள் கொடுப்பதை மனநிறைவுடன் ஏற்பவனே புத்திசாலி.

No comments:

Post a Comment