நான் நடக்கும் என்ற என் யூகம் தவறவில்லை அன்றே
நினைத்தேன். .இப்படியெல்லாம் நடக்கும் என்று. வேறொன்னுமில்லை..விஷயம் ரொம்ப -சிறுசு? அதேதான். இந்த சிக்கலுக்கே காரணம்
கையாண்ட முறைதான் விஷயம் என்னனுதானே கேட்கிறிர்கள் அதைதானே... சொல்லதான் வருகிறேன்..
அதற்குள் அவசரப்பட்டால் எப்படி?
பாருங்க
நேத்திக்கி என்ன நடந்தது
தெரியுமோ... அ..அ...அதான் அதேதான்! இப்போ சொன்னேளே அதே! ஆமா..உங்களுக்கெப்படி இவ்வளவு
துள்ளியமா விஷயம் தெரிஞ்சிருக்கு... ஆச்சரியம்தான் .இல்லையா பின்னே.. எங்காத்து சமாச்சாரம் உங்க ஆத்துக்குள்ளே வந்து
எட்டி பாத்திருக்கே!! அதான் காணும் பெரிய சமாச்சாரம்.
எங்க ஏங்காணும், இந்த சமாச்சாரங்களுக்கு
எத்தனை கால்காணும் இருக்கும். ஏன் கேட்கிறேன்னா, நேத்திக்கி எங்க ஆத்துக்குள்ளே நடந்த
சமாச்சாரம் இன்னிக்கு காத்தாலேயே உங்க ஆத்துக்குள்ளே நுழைந்துடுச்சே!!
ஏன்டி பர்வதம், காத்தால மார்க்கெட்டுக்கு
போனியே என் பேவரிட் காய்கறி வாங்கிட்டு வந்தியோ..... நீ எங்க வாங்கிட்டு வந்திருக்க
போற... ஆபிஷ்க்கு போய் வரவரைக்கும் தான் மனுசனுக்கு மரியாதை. அப்ப அவன் பளபளகிற புது
செருப்பு....
ரிட்டையர் ஆயச்சின்னா அவன் நைஞ்சி போன
பழைய செருப்பு. அந்த செருப்பின் 40 வருட உழைப்பை மறந்து தடால்ன்னு குப்பையிலே வீசி
ஏறிஞ்சிடுவேளே. அப்படித்தானே, இந்தக் கிழடையும் தூக்கி ஏறிஞ்சிட்டேள். ஆனா பர்வதம்
இந்த பசு கிழடு தட்டினாலும் பால் மறுக்காத காமதேனு. ஆமான்டி! நான் வீட்டிலே சும்மா உட்கார்திருந்தாலும்
எனக்கு மாசா மாசம் வர்ர பென்ஷன் பணம் தான்டி நமக்கு சோறு போட்டு குடும்பத்தேரை இழுத்துண்டு
போகுது...... ம்ம்ம்..... ஏன்டி பர்வதம்!.... ஓ! உள்ளே போயிட்டியா... சரி சமையல் உள்ளுக்குள்ளே
உனக்கு தலை மேல் வேலை இருக்கு.... நடக்கட்டும்.. நடக்கட்டும்..
யோவ் அப்பாசாமி!... ஓ! நீரும் போய்டிரா..
அந்த சமாசரத்தை செல்றதுக்குள்ளே போய்டாரே!
சரி நாளைக்கு விழாவாரியா அந்த சமாசரத்தை பத்தி விண்டுவிண்டு பேசலாம்.
அப்பன்னாவின் இந்தத் திண்ணை நாடகத்தை
வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அய்யா சாமி மண்டையில் அடித்துக் கொண்ட படி
பைத்தியம்
முத்திக்கிட்டே வருதே என்று அங்கலாய்த்துக் கொண்டான்..
- தொடரும் - 1 -
No comments:
Post a Comment