ரகுராமன் வீட்டிற்கு நுழையவும் அவனது மகன் குமார் வீட்டு ஹாலில் கையில் கிரிக்கெட் பாலை வைத்துக் கொண்டு தொடையில் தேய்தேய் என்று தேய்த்து திருஷ்டி கழிப்பது போல் இரண்டு தடவை பால் மேல் 'தூ... தூ...' என்று எச்சில் தூப்பி .. கையை மூன்று முறை சுற்றிச் சுழற்றி அந்த பாலை எறியவும் சரியாக இருந்தது.
'டாமால் !'
ஹாலின் சுவரோரம் மேஜை மேல் கம்பீரமாக வீற்றிருந்த மீன் தொட்டி பாலை காட்ச் பிடிக்க - தொட்டி உடைய - அதிலிருந்த தண்ணீர் சிதறி - அந்த தண்ணீரில் நிந்தி களித்துக் கொண்டிருந்த வண்ண வண்ண மீன்கள் தரையில் விழுந்து ( 'அய்யோ அம்மா!! ') என்று துடிக்க இக்காட்சிகளை எல்லாம் பார்த்த ரகுராமன் துடித்துப் போய்விட்டார்.
'டேய்டேய் நாசமாப் போறவனே! கிரிக்கெட் விளையாடுற இடமா இது?' - என்று கத்தித் திட்டித் தீர்த்தபடி வேகமாக செயல்பட்டு ஒரு பெரிய கோப்பையை எடுத்து அதில் அவசர அவசரமாய் தண்ணீர் ஊற்றி துடிக்கும் மீன்களை அவற்றிற்கு வலிக்கக்கூடாது என எண்ணுபவர் போல் நாசுக்காக பிடித்து கோப்பை நீரில் நீந்த விட்டார். அப்படியும் இரண்டு மீன்கள் ஜீவசமாதி அடைந்தன.
அதைப் பார்த்த ரகுராமனுக்கு நெஞ்சடைத்தது. கண்களில் கண்ணீர் தளும்பி இறந்த இரண்டு மீன்களுக்கும் அஞ்சலி செலுத்தினார்.
உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு வாடிக்கையான கடையில் ஒரு புதிய மீன் தொட்டிக்கு ஆர்டர் கொடுத்து - உடனே கொடுத்துனுப்புமாறு கட்டளையிட்டு ஓய்ந்தார்.
இத்தனை களேபரங்களுக்கு இடையில் சமையல் உள்ளிருந்து வந்த மனைவி ரகுராமனைப் பார்த்ததும், ' இப்போதான் வந்தீங்களா? இன்னிக்கி உங்களுக்கு ரொம்பப் பிடித்த சமையல்' என்று கூறியதும் மனைவியை ?குறியுடன் பார்த்த ரகுராமனிடம் கூறினாள்,
'மீன் குழம்பு. உங்களுக்கு ரொம்ப பிடித்த வஜ்ர மீன் குழம்பு!!'
ரகுராமனின் முகம் மலர்ந்தது. நாக்கில் நீர் ஊறத் தொடங்கியது.
'டாமால் !'
ஹாலின் சுவரோரம் மேஜை மேல் கம்பீரமாக வீற்றிருந்த மீன் தொட்டி பாலை காட்ச் பிடிக்க - தொட்டி உடைய - அதிலிருந்த தண்ணீர் சிதறி - அந்த தண்ணீரில் நிந்தி களித்துக் கொண்டிருந்த வண்ண வண்ண மீன்கள் தரையில் விழுந்து ( 'அய்யோ அம்மா!! ') என்று துடிக்க இக்காட்சிகளை எல்லாம் பார்த்த ரகுராமன் துடித்துப் போய்விட்டார்.
'டேய்டேய் நாசமாப் போறவனே! கிரிக்கெட் விளையாடுற இடமா இது?' - என்று கத்தித் திட்டித் தீர்த்தபடி வேகமாக செயல்பட்டு ஒரு பெரிய கோப்பையை எடுத்து அதில் அவசர அவசரமாய் தண்ணீர் ஊற்றி துடிக்கும் மீன்களை அவற்றிற்கு வலிக்கக்கூடாது என எண்ணுபவர் போல் நாசுக்காக பிடித்து கோப்பை நீரில் நீந்த விட்டார். அப்படியும் இரண்டு மீன்கள் ஜீவசமாதி அடைந்தன.
அதைப் பார்த்த ரகுராமனுக்கு நெஞ்சடைத்தது. கண்களில் கண்ணீர் தளும்பி இறந்த இரண்டு மீன்களுக்கும் அஞ்சலி செலுத்தினார்.
உடனே தொலைபேசியில் தொடர்பு கொண்டு தனக்கு வாடிக்கையான கடையில் ஒரு புதிய மீன் தொட்டிக்கு ஆர்டர் கொடுத்து - உடனே கொடுத்துனுப்புமாறு கட்டளையிட்டு ஓய்ந்தார்.
இத்தனை களேபரங்களுக்கு இடையில் சமையல் உள்ளிருந்து வந்த மனைவி ரகுராமனைப் பார்த்ததும், ' இப்போதான் வந்தீங்களா? இன்னிக்கி உங்களுக்கு ரொம்பப் பிடித்த சமையல்' என்று கூறியதும் மனைவியை ?குறியுடன் பார்த்த ரகுராமனிடம் கூறினாள்,
'மீன் குழம்பு. உங்களுக்கு ரொம்ப பிடித்த வஜ்ர மீன் குழம்பு!!'
ரகுராமனின் முகம் மலர்ந்தது. நாக்கில் நீர் ஊறத் தொடங்கியது.
ரகுராமன் பாசமெல்லாம் தொட்டி மீன்கள் மேல் மட்டும்தான் போலிருக்கே !
ReplyDeleteஇந்த கருத்தை சொல்லி இருக்கும் நான், உங்கள் தமிழால் வளர்ந்த மாணவன் அய்யா !
இது வேறு.
ReplyDeleteஅது வேறு.....
அருமை ஐயா.